கடந்த 24 மணி நேரத்துக்குள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை 28 ஆயுத்தாரிகளைக் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அண்மையில், வட ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாநிலத்தில் தலிபான் அமைப்பின் பிரதேச பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்கொலைத்தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு, சாலை குண்டு வெடிப்பு ஆகிய பல தாக்குதல்கள் தொடர்பாக இவர் சதிசெய்துள்ளார் என்று ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.(மோகன்)