தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நடவடிக்கை 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பெய்ஜிங்கில் வாழ்கின்ற சுமார் 100 தமிழர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர். சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவின் தலைவர் தலைமையிலான பணியாளர்கள் கவிதை, விடுகதை ஆகியவற்றை எடுத்துக்காட்டினர். தவிர, இந்நிகழ்ச்சியில் புத்தாண்டின் வாழ்த்துரை, பாடல், நடனம் ஆகியவைகளும் இடம்பெற்றன.