உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள், எகிப்தின் மத்திய நகரம் டான்டா மற்றும் வட பகுதியில் அமைந்துள்ள துறைமுக ஏலிக்சான்டாரில் இரு ஆலயங்கள் வெடி குண்டு தாக்குதலுக்குள்ளானது. இது வரை, 47 பேர் இதில் உயிரிழந்தனர். தேசிய அவசர நிலைமை 3 திங்கள்காலமாக நீடிக்கும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் எல் சி சி அறிவித்தார்.
டான்டா நகரத்தில் நிகழ்ந்த வெடி குண்டு தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயமடைந்தனர். ஏலிக்சான்டாரில் சான்த் மாக்ஸ் ஆலயத்தில் வெடி குண்டு நிகழ்ந்தது. காவற்துறையினர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.