சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், மியன்மார் அரசுத் தலைவர் உ தின் கியாவ் ஆகியோர் 10-ஆம் தேதி பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, கூட்டாக வெற்றி பெறுதல் ஆகிய ஒத்துழைப்புக் கோட்பாடுகளில் ஊன்றி நின்று, சீன-மியன்மார் உறவு தொடர்ந்து சீராகவும் நிதானமாகவும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர்.