சீன-இந்திய கிழக்கு எல்லைப் பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் 14ஆவது தலாய் லாமா அண்மையில் பயணம் மேற்கொண்டு, சீன அரசுக்கு எதிரான கூற்றை வெளியிட்டார். இதனிடையில், ஒரு சில இந்திய அரசு அதிகாரிகள் இரு நாட்டு எல்லை பிரச்சினை தொடர்பாக நியாயமற்ற கருத்துக்களை வெளியிட்டனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறுகையில்,
தலாய் லாமாவின் இந்தப் பயணம் இந்திய அரசினால் கூறிப்பிடப்பட்டது போல் மத நடவடிக்கைக்கானது அல்ல. தவிரவும், திபெத் தொடர்பாக இந்திய அரசு அளித்த அதிகாரப்பூர்வமான வாக்குறுதியையும் இந்தியா மீறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
உரிமை பிரதேசம் தொடர்பான சர்ச்சையைப் பேச்சுவார்த்தை மூலம் உரிய முறையில் தீர்ப்பதற்கான முயற்சியில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக லூ காங் கூறியுள்ளார்.
நாட்டின் உரிமை பிரதேசம் மற்றும் தேசிய பாதுகாப்பைச் சீனா உறுதியாக பேணிக்காக்கும் என்று அவர் தெரிவித்தார்.