சீனத் துணைத் தலைமையமைச்சர் சாங் கௌலி 13ஆம் நாள் மாஸ்கோவில் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டின் மே திங்கள் 14 முதல் 15ஆம் நாள் வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் சர்வதேச ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுக்கான கருத்தரங்கு பெய்ஜிங்கில் நடைபறவுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகில், ரஷியா, சீனாவின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக விளங்குகிறது. இக்கருத்தங்கில் ரஷிய அரசுத் தலைவர் புதின் கலந்துகொள்ள சீனா உணர்வுப்பூர்வமாக ஏற்பாடு செய்யும்.ரஷியா வழங்கியுள்ள ஐரோப்பிய-ஆசிய ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு முன்மொழிவில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளைச் சீனாவின் குறிப்பிட்ட வாரியங்கள் ஆராய்ந்து வருகின்றன என்று சாங் கௌலி தெரிவித்தார்.ரஷியப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டாளர்கள் கலந்துகொள்வதை ரஷியா வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீஙகின் அழைப்புக்கிணங்க இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். தற்போதைய ஒத்துழைப்பு என்ற அடிப்படையில், புதிய துறைகளின் ஒத்துழைப்பைக்களை விரிவாக்கி, ரஷிய-சீன பன்முங்க நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு புதிய இயக்கு ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என விரும்புவதாக புதின் தெரிவித்தார்.