ராஞ்சித் குமார், சீனாவின் ஜின்சோ நகரில் அமைந்துள்ள ஜின்சோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற தமிழ் மாணவர் ஆவார். இவ்வாண்டு, அவர் சீனாவில் படிக்கும் 4ஆவது ஆண்டாகும்.
அழகான வகுப்பறை, வசதியான விடுதி ஆகியவற்றை, பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்துள்ளது. எல்லா ஆசிரியர்களும், ஆங்கில மொழியின் மூலம், வகுப்பை நடத்துகின்றனர். வாழ்க்கையில், பல்கலைக்கழகப் பணியாளர்கள், எனக்கு நிறைய உதவி அளித்தனர். இங்கே வீடு போன்ற சூழல் உள்ளது என்று சீனாவில் தனது கல்வி வாழ்க்கை குறித்து, ராஞ்ஜித் கூறினார்.