சீனாவிலிருந்து புறப்பட்டு மத்திய ஆசியா மற்றும் தென்னாசியாவுக்குச் செல்லும் சர்வதேச சரக்குத் தொடர்வண்டி போக்குவரத்து இயல்பான நிலையில் நுழைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், இயங்கி வரும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 35 ஆகும். அவற்றின் மூலம் ஏற்றிச்செல்லப்பட்ட சரக்குகளின் மொத்த அளவு 46ஆயிரத்து 700 டன்னாகும்.
சீனாவின் கான் சூ மாநிலம், நிங்சியா ஹுவெய் இன தன்னாட்சி பிரதேசம், மத்திய ஆசியா மற்றும் தென்னாசியா ஆகியவற்றுக்கு இடையே இயங்கி வரும் சர்வதேச சரக்கு தொடர்வண்டிகள், கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான், பெலாரஸ், ஜெர்மனி, நேபாளம் முதலிய நாடுகளுக்குச் செல்கின்றன. (தேன்மொழி)