• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹிமாசல் மாநிலத்தில் பேருந்து விபத்தில் 44 பேர் சாவு
  2017-04-19 19:03:08  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் ஹிமாசல் மாநிலத்தில் 56 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 19ஆம் தேதி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 44 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டது.

மீட்புதவிப் பணிக்காக, காவல்துறையினரும் மருத்துவப் பணியாளர்களும் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

ஷிம்லா பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரி பேசுகையில், அளவுக்கு மீறிய சுமை, சாலையின் மோசமான நிலைமை, கவனக்குறைவுடன் ஓட்டியது ஆகியவை இவ்விபத்துக்கான காரணங்களாக இருக்க கூடும் என்று தெரிவித்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040