அண்மையில், அமெரிக்காவின் வான் தாக்குதலில், தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் வலுவிடம், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்விடம் மீதான புலனாய்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் 20ஆம் நாள் தெரிவித்தார்.
உள்ளூர் பிரதேசங்களின் சாலைகள் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. நிலத்தில் அதிகமான கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தொழில் நுட்ப வல்லுநர்களால் மட்டுமே நிகழ்விடத்தில் கள ஆய்வு செய்ய முடியும் என்று அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அதே நாள் தெரிவித்தார்.