ஏப்ரல் திங்கள் 20ஆம் நாள், சிச்சுவான் மாநில அரசு செய்தி அலுவலகம், செங் து நகராட்சி செய்தி அலுவலகம் ஆகிவற்றின் அழைப்பின் பேரில், இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஆமீர் கான் செங் து நகருக்குச் சென்று, சீனாவின் சிச்சுவானின் செங் து நகரில் பயணம் எனும் நடவடிக்கையில் கலந்து கொண்டார்.
இப்பயணத்தில், செங் து மக்களின் உற்சாகத்தையும் இந்நகரின் சுவையான உணவுகள், அழகான காட்சிகள் மற்றும் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு ஆகியவற்றையும் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளதாக அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, வெளிநாட்டு மக்களுக்கான பிரச்சார நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு மக்கள் தங்களது பார்வையில் "சீனக் கதை" குறித்து விவரிப்பார்கள்.