சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி, பாகிஸ்தான் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, பாகிஸ்தான் சமூகத்தில் ஆழமான செல்வாக்குகளை ஏற்படுத்தும் என்று. பாகிஸ்தானில் புகழ் பெற்ற சிந்தனை கிடங்கான பாகிஸ்தான் அமைதி வெளியுறவு கழகத்தின் தலைவர் ஃபால்ஹாத் அஸ்ஃப் அம்மையார் அண்மையில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
இந்த இடைவழி தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றத்துடன், பாகிஸ்தானில் வேலை வாய்ப்புகள் பெறுவதை, குறிப்பாக, இளைஞர்களுக்கும் மகளிர்களுக்கும் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும். அதே வேளை, இத்திட்டப்பணிகள், வறுமை ஒழிப்புப் பணிக்கு உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.