• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சி-919 விமானம் தரையில் உயர்வேகமாக பயணிக்கும் சோதனை வெற்றி
  2017-04-23 15:13:04  cri எழுத்தின் அளவு:  A A A   

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள சீனாவின் சி-919 பயணியர் விமானம் ஒன்று, 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தின் ஓடுபாதையில் உயர்வேகத்துடன் பயணித்து முன் சக்கரங்களை எழுப்பும் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது வரை, சி-919 விமானம் தரையில் உயர்வேமாக பயணிக்கும் சோதனையை 4ஆவது முறையாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

பயணியர் விமானம் ஓடுபாதையில் மணிக்கு 55 கிலோமீட்டருக்குள் என்ற வேகத்துடன் பயணிப்பது, குறைந்த வேகமான பரிசோதனை ஆகும். 170 கிலோமீட்டருக்கு மேல் என்ற வேகத்துடன் பயணிப்பது உயர்வேக சோதனை என்ற வழக்கம் இருக்கிறது. தற்போது, சி-919 விமானம் உயர்வேகமாகப் பயணிக்கும் காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040