ஏப்ரல் முதல் நாள் சீனாவின் சிஆன் நகரத்தில் இருந்து புறபட்டு, சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி ஒன்று 9,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து 21ஆம் நாளன்று ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட்டை சென்றடைந்தது.
சிஆன் மற்றும் புடாபெஸ்ட் ஆகிய இரு நகரங்களுக்கிடையே இத்தகைய சரக்கு தொடர்வண்டி சேவை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
41 வண்டிப் பெட்டிகளுடன், இந்த சரக்கு தொடர்வண்டி, ஆடைகள், சிறிய மின்சார சாதனங்கள், விளையாட்டுச் சாமான்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களை கொண்டு சென்றது.
அதற்கு முன்பு, போலாந்தின் வார்சா, ஜெர்மனியின் ஹாம்பர்கர், ரஷியாவின் மாஸ்கோ ஆகிய நகர்களுக்கும் சிஆன் நகருக்கும் இடையே சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிச் சேவை திறந்து வைக்கப்பட்டது.