சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 23ஆம் நாள் ஏதென்சில், கிரேக்க வெளியுறவு அமைச்சருடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அணு ஆயுத நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கின்றது. அதில், எவ்வித மாற்றமுமில்லை. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்ற நிலையிலும் கொரிய தீபகற்பத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காப்பதிலும் ஊன்றி நிற்க வேண்டும். அமைதி வழிமுறையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் வாங் யீ கூறினார்.