எதிர்கால ஒத்துழைப்பை ஆழமாக்கும் வகையில், உலக வங்கியும், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும் 23ஆம் நாள் வாஷிங்டனில் குறிப்பாணை ஒன்றை உருவாக்கின.
இக்குறிப்பாணை மூலம், வளர்ச்சிக்கான நிதி திரட்டல், மனிதத் தொடர்பு உள்ளிட்ட துறைகளுக்கு ஒத்துழைப்பு கட்டுகோப்பு வழங்கப்பட்டு, பிரதேச மற்றும் தேசிய நிலை ஒருங்கிணைப்புக்கான அடிப்படை உருவாக்கப்படும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இருதரப்பும் ஒத்துழைப்பு மூலம் ஆசிய பிரதேசத்தில் ஆக்கப்பூர்வ சாதனைகளை அதிகமாக பெறும் என்று எதிர்பார்ப்பதாக ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கித் தலைவர் ஜின் லிச்சுன் ஒரே அறிக்கையில் தெரிவித்தார். (வான்மதி)