ஆப்கானிஸ்தானின் வட பகுதியிலுள்ள பால்க் மாநிலத்தின் மசார் இ ஷரீஃப் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அரசுத் தலைவர் அஷ்ரப் கனி 23ஆம் நாளை நாடளாவில் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவித்தார். அந்நாட்டு அரசுத் தலைவர் மாளிகை அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி 21ஆம் நாள் பிற்பகல், தேசியப் படை தங்கியிருந்த இடத்தில் அமைந்துள்ள ஒரு மசூதி மற்றும் சாப்பாட்டு விடுதியின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 140 பேர் உயிரிழந்தனர். 160 பேர் காயமடைந்தனர். தலிபான் அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. (ஜெயா)