• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு
  2017-04-24 13:00:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் அழைப்பின் பேரில் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஷிச்சின்பிங் பேசுகையில், சர்வதேச நிலைமை வேகமாக மாறி வரும் பின்னணியில், சீனாவும் அமெரிக்காவும் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்துவது அவசியமானது என்று தெரிவித்தார்.

மேலும், இருதரப்பும் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இவ்வாண்டுக்குள் அமெரிக்க அரசுத் தலைவர் சீனாவில் மேற்கொள்ளும் பயணத்துக்கான ஆயத்தப் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

டிரம்ப் கூறுகையில், இருநாட்டுறவின் வளர்ச்சியில் மனநிறைவு அடைவதாகவும், சீன மக்களுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

கொரிய தீபகற்ப நிலைமை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பவையின் தீர்மானத்தை மீறிய செயலை சீனா உறுதியாக எதிர்க்கிறது. அத்துடன், தொடர்புடைய தரப்புகளும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040