எகிப்தின் செங்கடல் பரப்பில் எகிப்தும் அமெரிக்காவும் 23ஆம் நாள் ஈகல் சரூட் 2017 எனும் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்த தொடங்கின. நட்பார்ந்த நாடுகளுடன் கடல் படையின் போரிடும் ஆற்றலை வலுப்படுத்துவது இப்பயிற்சியின் நோக்கமாகும் என்று எகிப்தின் அல் அஹ்ராம் செய்தி ஏடு அந்நாட்டன் ராணுவ வட்டாரத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேஸ், பஹ்ரைன், பாகிஸ்தான், குவைத், இத்தாலி ஆகிய நாடுகள் அழைப்பின் பேரில் இந்த ராணுவப் பயிற்சியைப் பார்வையிட்டன.
டோனால்டு டிரம்ப் அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், இரு நாட்டுறவில் அதிக முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (வாணி)