• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
  2017-04-25 08:59:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 24ஆம் நாள் ஏதென்சில் நடைபெற்ற பழமையான நாகரிகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் பேசுகையில் கருத்தரங்கில் உருவாக்கப்பட்ட மூன்று முக்கிய பொதுக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார்.

முதலாவதாக அமைதி. அமைதியின் முக்கியத்துவத்தை பழம்பெரும் நாகரிக நாடுகள் மிகவும் அறிந்து கொண்டு பேணிமதிக்கின்றன. எந்த சர்ச்சையும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். இரண்டாவதாக அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை. பல்வேறு நாகரிக வளங்களும் சமமாக உள்ளன. ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக் கொண்டால் இணைந்து முன்னேற முடியும். மூன்றாவதாக ஒத்துழைப்பு. நாங்கள் கை கோர்த்துக் கொண்டு ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி கூட்டு செழுமையை நனவாக்க வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040