• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமைத் தளபதி பதவி விலகினர்
  2017-04-25 09:00:32  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லா ஹபிபீ, அந்நாட்டின் தேசியப் பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி குவாதம் ஷா ஷகிம் ஆகியோர் அரசுத் தலைவர் அஷ்ரப் கனியிடம் வழங்கிய பதவி விலகல் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் மாளிகை 24-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

அண்மையில், அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகின்றது. குறிப்பாக, வட பகுதியிலுள்ள பால்க்ஹ் மாநிலத் தலைநகர் மசர்-இ-ஷரிஃப் நகரில் தேசியப் பாதுகாப்பு படையின் தளம் தாக்குதலுக்குள்ளானதன் காரணமாகவே, ஹபிபீயும் ஷகிமும் தங்களது பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040