ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வன்முறை தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பன்னாட்டு நாடாளுமன்ற ஒன்றியம், இலங்கை நாடாளுமன்றம், ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஆகியவை 25ஆம் நாள் கொழும்புவில் கூட்டம் ஒன்றை நடத்தின.
ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.பயங்கரவாத்த்தை ஒடுக்குவதில் பயன் மிக்க நிறுவனங்களில் நாடாளுன்றங்கள் இடம்பெறுகின்றன என்று ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
ஒரு நாட்டின் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்துறையில் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.(வாணி)