• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகெங்கும் நிகழும் மோதல்களால் 2.5 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு
  2017-04-26 18:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகின் 22 நாடுகளில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 6 முதல் 15 வயது உடைய 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை, உலகம் முழுவதும் இந்த வயதுவரம்பு கொண்டுள்ள குழந்தைகளின் மொத்தம் எண்ணிக்கையில் 22 விழுக்காடாக உள்ளது என்று ஐ.நா. குழந்தைகள் நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தென் சூடானில் துவக்கப் பள்ளிகளில் பயிலும் வாய்ப்பை இழந்த குழந்தைகளின் விகிதம், 72விழுக்காட்டை எட்டி, முதலிடம் வகிக்கின்றது. இவ்விகிதத்தில், சாட் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 50 விழுக்காடு மற்றும் 46 விழுக்காட்டுடன் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040