27ஆவது அபு தாபி சர்வதேச புத்தகக் கண்காட்சி 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. பிரதம விருந்தினர் நாடான சீனா சுமார் 3500 வகைகளிலான 5400க்கும் மேலான புத்தகங்களை கொண்டுசென்றுள்ளது. இவற்றில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் எழுதிய சீனாவின் ஆட்சி எனும் புத்தகம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் சீனா மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் சிலர் இப்புத்தகம் பற்றி விவாதம் நடத்தியுள்ளனர்.(ஜெயா)