• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவின் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானம்
  2017-04-27 09:31:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 26ஆம் நாள் பெர்லினில் ஜெர்மனி துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சிக்மர் கெப்ரில் இருவரும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்துப்பேசினர். வட கொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினை தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை பல்வேறு நாடுகள் பன்முகங்களிலும் முழுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று சந்திப்பின் போது வாங் யீ கூறினார்.

கடந்த சில நாட்களாக, கொரிய தீபகற்பத்தில் கவலை அளிக்கும் நிகழ்வுகள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம், பல நாடுகள் கூட்டாக பாடுபட்டத்தன் பயனாகும். கொரிய தீபகற்பத்தில் இந்த நிதானமான நிலைமை, அவ்வப்போது மாறக் கூடும். பல்வேறு நாடுகள் முரண்பாட்டை அதிகரிக்கும் செயல்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.(சிவகாமி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040