ஏப்ரல் 27ஆம் நாளன்று இரவு சீனாவின் சரக்கு விண்கலமான தியன்சோ-1, விண்ணிலுள்ள சுற்று வட்டப் பாதையில் இயங்கும் தியன்கொங்-2 எனும் ஆய்வு விண்கலத்திற்கு உந்துப் பொருட்களை விநியோகிக்கும் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இத்துடன், தியன்சோ-1 விண்கலத்தின் பயணம் வெற்றி பெற்றுள்ளது.மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் 2ஆவது கட்டம் வெற்றி பெறுவதையும், சீனாவின் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சிக் காலம் துவங்குவதையும், இது குறிக்கிறது.
திட்டமிட்டப்படி, 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை மனிதர்கள் செல்லும் விண்வெளி நிலையத்தை சீனா அமைக்கும். தேவைக்கு இணங்க, இந்நிலையம் உரிய அளவில் உருவாக்கப்படும் என்று சீனாவின் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளித் திட்டப் பணியகத் தலைவர் வாங் சாவ்யாவ் தெரிவித்தார்.
தற்போது, விண்வெளிப் பணிகளில், சீனா, உலகின் பல நாடுகளுடன் இணைந்து பரந்த அளவில் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது. விண்வெளி நிலையக் காலம் தொடங்கிய பிறகு சீனா முன்பு போலவே ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. சாதனங்களின் ஆய்வு மற்றும் தயாரிப்பு, சீனாவின் ஆய்வு நிலையத்தை பயன்படுத்தி விண்வெளி அறிவியல் ஆய்வு மேற்கொள்வது, ஆய்வு சாதனங்களைக் கூட்டாக பகிர்ந்து பயன்படுத்துவது போன்ற ஒத்துழைப்பு வழிமுறைகள் இதில் அடங்கும்.