சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 28ஆம் நாள் நியூயார்க் மாநகரில் கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய ஐ.நா. பாதுகாப்பு அவையின் அமைச்சர் நிலை வெளிப்படையான கூட்டத்தில் கலந்துகொண்ட போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை சந்தித்துரையாடினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப்பும் மார்-அ-லாகோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். இது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையிலான நெருங்கிய பரிமாற்றம் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்று வாங் யீ தெரிவித்தார்.
வாங் யீ இக்கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு டில்லர்சன் நன்றி தெரிவித்தார். கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளில் இரு தரப்பும் ஆக்கபூர்வ ஒத்துழைப்பை மேற்கொள்ள துவங்கியுள்ளன. சீனாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் உயர் நிலை பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை அதிகரித்து, பல்வேறு அறை கூவல்களைச் சமாளிக்க வேண்டுமென அமெரிக்கா விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.(மோகன்)