சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 28ஆம் நாள் அமெரிக்காவில் கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய ஐ.நா. பாதுகாப்பு அவையின் அமைச்சர் நிலை வெளிப்படையான கூட்டத்தில் கலந்துகொண்ட போது, ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸைச் சந்தித்துரையாடினார்.
சீன தலைவர்களின் வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களையும் வாங் யீ குத்ரெசிடம் தெரிவித்தார். ஐ.நாவுக்கு புதிய ஆற்றலையும், சிறந்த முன்முயற்சிகளையும் குத்ரெஸ் வழங்கி வருகிறார். ஐ.நாவை மையமாகக் கொண்ட பலதரப்புவாதத்துக்கு சீனா ஆதரவு அளித்து வருகின்றது. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காத்து, மனித குல வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், ஐ.நா முக்கியமான பங்காற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து குத்ரெஸ் எதிர்பார்ப்பு தெரிவித்தார். சீனாவுடனான ஒத்துழைப்பில் ஐ.நா செயலகம் கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் உருவாக்கம் உள்ளிட்ட சீனாவின் பல நடவடிக்கைகளால், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், கால நிலை மாற்றம் உடன்படிக்கை ஆகியவற்றை செயல்படுத்துவதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச விவகாரத்தில் சீனா மேலும் பெரும் பங்காற்றுவதை ஐ.நா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.(மோகன்)