• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
  2017-04-30 15:10:06  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகளவில் வறுமை ஒழிப்புக்கான கூட்டாளிகளின் கருத்தரங்கு 28ஆம் நாள் இத்தாலி வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது. வறுமை ஒழிப்புத் துறையில் பெறப்பட்ட பல்வேறு நாடுகளின் வெற்றிகரமான அனுபவங்கள் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில், உலகம் முழுவதிலும் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து, வறுமையிலிருந்து அதிக மக்கள் விடுபட்டு வந்துள்ளனர். இருந்த போதிலும், தற்போதைய உலகத்தில் 80 கோடிக்கு அதிகமானோர் இன்னமும் மிகவும் ஏழையான நிலையில் அல்லல்படுகின்றனர். உலக வறுமை ஒழிப்புக் கடமை கடுமையானது. குறைந்த வருமானமுடைய நாடுகள், வேளாண் துறை மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் மீது கட்டமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இக்ருத்தரங்கில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

புத்தாயிரம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்குகளில் வறிய மக்களின் எண்ணிக்கையை 50 விழுக்காட்டுக்கும் கீழாக குறைக்கும் இலக்கை முன்கூட்டியே நனவாக்கும் முதலாவது வளரும் நாடாக சீனா திகழ்கின்றது. ஐ.நா சர்வதேச வேளாண் துறை வளர்ச்சி நிதியத்தின் அலுவலர் முது உரை நிகழ்த்திய போது, சீனாவின் வறுமை ஒழிப்பு மாதிரி பயன்மிக்கது என்றும், சீனாவின் வெற்றிகரமான நடைமுறை, உலகின் வறுமை ஒழிப்பு லட்சியத்துக்கு வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040