பிரிட்டனைத் தவிர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் 29ஆம் நாள் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய பேச்சுவார்த்தை பிரச்சினை கலந்தாலோசிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய பேச்சுவார்த்தையின் வழிகாட்டல் கோட்பாடு குறித்து 27 நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கருத்தொற்றுமை உருவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்குழுவின் தலைவர் டொனால்டு டுஸ்க் தெரிவித்தார்.
பலகட்ட பேச்சுவார்த்தை வழிமுறையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும். குடிமகன் உரிமை, நிதி, எல்லை ஆகிய பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் முதலில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.(மோகன்)