மே திங்களில் மத்திய கிழக்கு பிரதேசம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளில் பயணம் செய்ய அரசுத் தலைவர் டோனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை 4ஆம் நாள் அறிவித்தது. அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
திட்டப்படி, சவுதி அரேபியா, வாத்திகான் ஆகிய நாடுகளில் டிரம்ப் பயணம் மேற்கொண்ட பின், பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்தின் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். பிறகு, இத்தாலியில் நடைபெறவுள்ள 7 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வார்.