சீனாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள சி919 பெரிய ரக பயணியர் விமானம் ஒன்று, 5ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையத்தில் தன் முதல் வான் பயணத்தை மேற்கொண்டது.
திட்டமிட்டப்பட்டி, சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும் பறத்தலில், தரையிலிருந்து சரிபார்த்தல், வானில் பறக்க தொடங்குதல், ஒரே உயரத்தில் பறத்தல், தரையில் இறங்குதல் உள்ளிட்ட மொத்தம் 5 கட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டது.
168 இருக்கைகளை கொண்டுள்ள சி919 விமானம், சர்வதேச விமானத் தரத்தின் படி சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்துள்ள பெரிய ரக விமானம ஆகும். சர்வதேசத்தில் ஒரே நிலையிலான முக்கிய விமானங்களை விட, சி919 விமானம் பல பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. விமானத்தின் மூளை மற்றும் நரம்புகள் என அழைக்கப்படும் மின்னணு அமைப்புமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளவை முன்னிலை தொழில் நுட்பங்கள் ஆகும் என்று சி919 விமானத்தின் துணை வடிவமைப்பாளர் சோ குய்ரோங் தெரிவித்தார்.