ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றின் (10+3)நிதித் துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் 20ஆவது கூட்டம் 5ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்றது. உலகம் மற்றும் பிரதேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை, ஆசியான் நாடுகள் மற்றும் சீன-ஜப்பான்-தென் கொரியாவின் நிதி ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.