இவ்வாண்டு ஜுலை திங்கள் முதல், ஐரோப்பிய மத்திய வங்கி நாணயக் கொள்கைக்கான வழிகாட்டியை மாற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாணயக் கொள்கையைத் தளர்த்தும் முறையை முடித்து கொள்ளும் அறிகுறியை வெளிபுறத்துக்கு வெளிகாட்டும் என்று டிர் ஸ்பைய்ஜிர் எனும் ஜெர்மனி இதழின் இணையதளத்தில் 12ஆம் நாள் வெளியான கட்டுரை ஒன்றில் கூறப்பட்டது.
இவ்வாண்டு இலையுதிர்காலத்தில், நாணயக் கொள்கையைத் தளர்த்தும் முறையை படிப்படியாக விட்டுச் செல்லும் திட்டத்தை, ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிடக் கூடும். தவிரவும், 2018ஆம் ஆண்டு இறுதியில், ஐரோப்பி மத்திய வங்கி தன் முதல் வட்டி உயர்வை அறிவிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.