• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2017-05-14 10:58:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம் மே 14ஆம் நாள் காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்பதை, அமைதி, செழுமை, திறப்பு, புத்தாக்கம், நாகரிகம் ஆகியவை உள்ளடங்கும் பாதையாகவே கட்டியமைக்க பல்வேறு தரப்புகளும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஷிச்சின்பிங் தனது உரையில் பேசுகையில்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 4 ஆண்டுகளில் சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் இடையே கொள்கைத் துறைப் பரிமாற்றம், வசதிகளின் ஒன்றிணைப்பு, தடையற்ற வர்த்தகம், நிதி திரட்டல், மக்களிடையேயான தொடர்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கும் இந்த முன்மொழிவின் நெடுகிலுள்ள நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகத் தொகை 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. 5000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் தொழில் நிறுவனங்கள், இந்த நாடுகளுக்கு 110 கோடி அமெரிக்க டாலர் வரி வசூலையும் 1.8 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கின. இந்த சாதனைகளின் மூலமாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, கால ஓட்டத்திற்கு ஏற்றதாகவும், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் நலன்களுக்குப் பொருந்தியதாகவும் உள்ளது. இந்த முன்மொழிவுக்கு பரந்த எதிர்காலம் உண்டு என்று கூறினார்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040