மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்னெடுக்கும் வகையில் சீனாவின் பல நடவடிக்கைகளை ஷிச்சின்பிங் தனது உரையில் அறிவித்தார். இதற்கிடையில், பட்டுப் பாதை நிதியத்திற்கு சீனா புதிதாக 10ஆயிரம் கோடி யுவானை அதிகரிக்கும். அடிப்படை வசதிக் கட்டுமானம், உற்பத்தித் திறன், நிதி ஒத்துழைப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில், சீன தேசிய வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி முறையே 25ஆயிரம் கோடி மற்றும் 13ஆயிரம் கோடி யுவானை கடன் வழங்கும். தவிரவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான தடையற்ற வர்த்தக வலையமைப்பை கட்டியமைப்பது, அறிவியல் தொழில் நுட்பப் புதுமையாக்கம் பற்றிய செயல்பாட்டுத் திட்டத்தை துவங்குவது, இணைந்த ஆய்வகங்களை கூட்டாக அமைப்பது, அறிவியல் தொழில் நுட்ப பூங்காவின் ஒத்துழைப்பு மேற்கொள்வது உள்ளிட்ட முயற்சிகளையு சீனா எடுக்கும். வரும் 3 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் பங்கேற்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு சீனா 6 ஆயிரம் கோடி யுவான் நிதியுதவி அளித்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டப்பணிகளை மேற்கொள்ளும்.