காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, அந்நாட்டில் இதுவரை 11 பேர் எபோலா நோயாளி என சந்தேகிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் ஒருவர் எபோலா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு இந்த கொடூரமான எபோலா வைரஸ் தொற்றின் காரணமாக மேற்கு ஆபிரிக்காவில் சுமார் 11,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் 66 பேர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 49 பேர் உயிரிழந்தனர்.