5வது உலக சிந்தனை கிடங்கு அமைப்பு மாநாடு மே 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேலான நிபுணர்களும் அறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, விரிவான விவாதம் நடத்தினர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, உலக வளர்ச்சிக்குப் புதிய உயிராற்றலை ஊட்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சீனச் சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்ற மையம் உலக சிந்தனை கிடங்கு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. (பூங்கோதை)