• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் தலைமையமைச்சர்: அலிபாபா குழுமத்துடன் ஒத்துழைப்புக்கான எதிர்ப்பார்ப்பு
  2017-05-17 09:21:14  cri எழுத்தின் அளவு:  A A A   

அலி பாபா குழுமம் பாகிஸ்தானில் தனது மேடையையும் அடிப்படை வசதிகளையும் கட்டியமைப்பதற்கு பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஆதரவு அளிப்பதாக அந்நாட்டு தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீப் மே 16-ஆம் நாள் தெரிவித்தார்.

சீனாவிலுள்ள அலி பாபா குழுமத்தின் தொழில் பூங்காவில் பயணம் மேற்கொண்டபோது, ஷெரீப் கூறுகையில், தற்போது பாகிஸ்தானில் மின்னணு வணிக அலுவல் தொடக்க வளர்ச்சி கட்டத்தில் உள்ளது. இத்துறையில் வளர்ச்சிக்கான மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது என்றார். மேலும், தனது நாட்டின் ஆக்க தொழில் துறையை, அலி பாபா மூலம் சர்வதேச சந்தையாக விரிவாக்கும் வகையில், பாகிஸ்தானின் மின்னணு வணிக அலுவல் தொடர்பான அடிப்படை வசதிகளைக் கட்டியமைப்பதற்கு அலி பாபா குழுமம் உதவியளிக்க வேண்டும் என்றும் ஷெரீப் விருப்பம் தெரிவித்தார்.

அலிபாபாவின் தலைவர் மா யுன்(ஜாக் மா) கூறுகையில், மின்னணு வணிக அலுவல் மற்றும் இணைய நிதி அலுவல் பற்றிய அனுபவங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள அலி பாபா குழுமம் விரும்புகின்றது. பாகிஸ்தானின் வணிகப் பொருட்கள் சீனாவில் மட்டுமல்ல, உலக சந்தையிலும் விற்பனை செய்வதற்கு அலி பாபா குழுமம் உதவி அளிப்பதாக தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040