ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் எனும் வர்த்தக சலுகை தகுநிலையை இலங்கை இந்த வாரத்துக்குள் மீண்டும் பெறவுள்ளது என்று இலங்கை மற்றும் மல தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் தாங் லை மர்குயே செவ்வாய்கிழமை கொழும்புவில் அறிவித்தார்.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் தகுநிலை அளிப்பதை எதிர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இல்லை. இதனால், இந்த வாரம் வியாழக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டு, இலங்கை வெள்ளிக்கிழமை முதல் இந்த வலுகை பெறும் என்று அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி முறை என்பது, வளரும் நாடுகள் தாழ்ந்த வரி அல்லது வரி இல்லாத நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக சலுகையாகும்.