தென் சீனக் கடல் விவகாரத்துக்கான பல்வேறு தரப்புகளின் செயல்பாட்டு அறிக்கையை நடைமுறைபடுத்துவது குறித்து, சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே 14ஆவது உயர் அதிகாரிகள் கூட்டமும் 21ஆவது கூட்டுப் பணிக் குழுக் கூட்டமும் மே 17, 18 ஆகிய நாட்களில் சீனாவின் குய்சோ மாநிலத் தலைநகர் குய்யாங் நகரில் நடைபெற்றன. சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த அறிக்கையை பயனுள்ளமுறையில் நடைமுறைபடுத்துவது, கடல் விவகார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, தென் சீனக் கடலின் செயல்பாட்டுக் கோட்பாடு உள்ளிட்டவை பற்றி இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.