ஆற்றல் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த 10 அணு உலைளும் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
மாசில்லாமல், 7 ஆயிரம் கிலோ வாட் மின்னாற்றல் இந்த புதிய அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன.
நாட்டில், தற்போது செயல்பட்டு வரும் 22 அணு உலைகள் மூலம் 6,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2022ஆம் ஆண்டுக்குள் மேலும், 6,700 மெகா வாட் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.