• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரிய அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
  2017-05-19 14:15:43  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 19ஆம் நாள், பெய்ஜிங்கில் மக்கள் மாமண்டபத்தில், தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் லீ ஹை சானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது, சீன-தென் கொரிய உறவு முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. இரு தரப்புறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தென் கொரியாவுடன் இணைந்து, இரு தரப்புறவு இயல்பான வளர்ச்சி பாதைக்குத் திரும்புவதை விரைவுபடுத்த சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கிற்கு, தென் கொரிய அரசுத் தலைவரின் கடிதம் ஒன்றை லீ ஹை சான் அவரிடம் அளித்தார். சீனாவுடன் ஒருங்கிணைந்து, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தென் கொரியா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040