• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பிரச்சினை
  2017-05-20 16:49:06  cri எழுத்தின் அளவு:  A A A   

ராணுவ முறை மூலம் கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையைத் தீர்ப்பது நம்ப முடியாத பின்விளைவை ஏற்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் 19ஆம் நாள் கூறினார்.

ஐ.நா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுடன் அமெரிக்கா ஒத்துழைப்பு மேற்கொண்டு, கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 17ஆம் நாள் வாஷிங்டனில் தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஹெங்க் சியோக் ஹைன்னுடன் சந்திப்பு நடத்தினார். நிலைமை பக்குவடைந்தால், வட கொரியாவுடன் பரிமாற்றத்தை மேற்கொண்டு, அமைதியை நனவாக்க வேண்டுமென அமெரிக்கா விருப்பம் தெரிவிப்பதாக டிரம்ப் கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040