2 நாட்கள் நீடிக்கும் 20 நாடுகள் குழுவின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் 20ஆம் நாள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நிறைவடைந்தது. உலகளவில் ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, பெர்லின் அறிக்கை வெளியிடப்பட்டது.
20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக ஜெர்மனி பதவி ஏற்கும் காலத்தில், ஆரோக்கியம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசியல் ஆதரவை வலுப்படுத்தி, உலகளவில் அறைகூவலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக ஆரோக்கிய ஒத்துழைப்பில் உலகச் சுகாதார அமைப்பின் தலைமை தகுநிலையை ஆதரிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
20 நாடுகள் குழுவின் கூட்டங்களில் விவாதிக்கப்படும் அம்சங்களில் ஆரோக்கியத்தை சேர்ப்பது, உலகில் மக்களின் உடல் நல மேம்பாட்டுக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜெர்மனி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.