மே 21ஆம் நாள், சீனாவின் 24 சூரிய பருவங்களில் "சியௌ மான்"என்னும் பருவமாகும். கோடைக்காலத்தில் முதிர்கின்ற பயிர்களின் விதை முதிர்ச்சி அடையத் தொடங்குகின்ற பருவம் இதுவாகும். சீனாவின் கூய்சோ மாநிலத்தின் லீ பிங் மாவட்டத்தைச் சேர்ந்த யாங் தூங் கீராமத்தில் அன்று ஏர் உழும் விழா நடைபெற்றது. உள்ளூர் மக்கள் அனைவரும் தரிசு நிலங்களை பண்படுத்தத் துவங்கினர்.