• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
  2017-05-23 09:33:29  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியா போலாரிஸ்-2 என்னும் மத்திய மற்றும் தொலை தூர எறிவிசை ஏவுகணையை மே 21ஆம் நாள் சோதனை செய்தது. இவ்வாண்டு, வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது இது 8வது முறையாகும். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் பேசுகையில்,

வட கொரியா, ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை அத்துமீறி, எறிவிசை ஏவுகணையைச் செலுத்துவதை, சீனா எதிர்க்கிறது. தற்போதைய சூழ்நிலையில், தொடர்புடைய பல்வேறு தரப்புகள், கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் கொரிய தீபகற்பப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றார் அவர். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040