பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கு கடந்த சில ஆண்டுகளாக சீராக உள்ளது. மேலதிகமான சர்வதேச முதலீட்டாளர்கள் பஞ்சாப் மாநிலத்தில் முதலீடு செய்ய வரவேற்கின்றோம் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் அமைச்சர் முகமுட் ஷபாஸ் சாலீஃப் 22ஆம் நாள் லாகூர் நகரில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசும், இம்மாநிலத்தின் அரசும் மற்றும் தொடர்புடைய வாரியங்களும் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஆதரவுகளை வழங்கும். முதலீட்டு இடர்பாட்டை இயன்றளவில் குறைத்து, பல்வேறு தரப்புகள் கூட்டு பயன் தரும் ஒத்துழைப்புகளை நனவாக்கலாம் என்று இம்மாநிலத்தில் நடைபெற்ற வணிக வாய்ப்புச் சர்வதேச கருத்தரங்கில் பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார். (சரஸ்வதி)