• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் பலி;50 பேர் காயம்
  2017-05-23 11:25:46  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரிலுள்ள விளையாட்டு அரங்கு ஒன்றில் 22ஆம் நாளிரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பில், 19 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர் என்று பிரிட்டன் காவல்துறை உறுதி செய்தது.

22ஆம் நாள் இரவு 10:30 மணியளவில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது, விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டிருந்த இசை நிகழ்ச்சி நிறைவு பெறும் தருவாயில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இது பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மான்செஸ்டர் காவல்துறை இச்சம்பவத்தை விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040