• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு பிரிட்டன் தலைமை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்
  2017-05-24 09:08:22  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரிலுள்ள விளையாட்டு அரங்கு ஒன்றில் 22ஆம் நாளிரவு ஏற்பட்ட தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது அதிர்ச்சியான பயங்கரவாத தாக்குதலாகும் என்று பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே 23ஆம் நாள் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

இக்குண்டு வெடிப்பில், 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 59 பேர் காயமடைந்தனர். இந்த வெடிப்பு, தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பாகும் என்று பிரிட்டன் காவல்துறை உறுதி செய்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040